Kural 478

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aakaaRu aLavitti thaayinunG kaetillai
poakaaRu akalaak kadai.

🌐 English Translation

English Couplet

Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.

Explanation

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

2 மணக்குடவர்

பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

3 பரிமேலழகர்

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் ; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து ; கேடு இல்லை - கெடுதல் இல்லை . இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது . அளவு என்பது பின்னுங் கூட்டியுரைக்கப் பட்டது . 'அகலாக்கடை 'என்றதனால் , வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம் . ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர்வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக்குளநீர் குன்றாது என்பதே, பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்ட இக்குறட்பொருள்.

5 சாலமன் பாப்பையா

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

ஆக்கம் தரும் வரவு அளவில் குறைந்தாலும் கேடு ஏற்பாடாது செலவு பெரியதாக இல்லாது இருந்தால்.

More Kurals from வலியறிதல்

அதிகாரம் 48: Kurals 471 - 480

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature