Kural 1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

alandhaarai allalnoai seydhatraal thammaip
pulandhaaraip pullaa vidal.

🌐 English Translation

English Couplet

'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.

Explanation

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

2 மணக்குடவர்

தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.

3 பரிமேலழகர்

(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும். நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை.(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும். நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

பிரிந்து இருந்தவரை வேதனை நோய் பற்றச் செய்வது தம்மை கூடியவரை கூடவிடாமல் செய்வது.

8 புலியூர்க் கேசிகன்

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்!

More Kurals from புலவி

அதிகாரம் 131: Kurals 1301 - 1310

Related Topics

Because you're reading about Lovers' Quarrel

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature