Kural 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aRivatranG kaakkunG karuvi seRuvaarkkum
uLLazhikka laakaa araN.

🌐 English Translation

English Couplet

True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes Unshaken will defy.

Explanation

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

2 மணக்குடவர்

ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.

3 பரிமேலழகர்

அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவு அற்றம் காக்கும் கருவி - நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; செறுவார்க்கும் அழிக்கல் ஆகா உள் அரண்- அதுவுமன்றிப் பகைவராலும் அழிக்கமுடியாத உள்ளரணாம். காத்தல் - முன்னறிந்து தடுத்தல். உள்ளரண் அகக்கரணக் கூறாகிய அரண், உட்புகுந்தழிக்க முடியாத நுண்பொருள் வடிவினது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அறிவு என்பது இறுதி வாராமல் காப்பாற்றுகின்ற கருவியாகும். பகைவர்களாலும் அழிக்க முடியாத உள்ளிருப்பதாகிய காவலிடமென்னும் கோட்டையாகும்.

6 சாலமன் பாப்பையா

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

7 கலைஞர் மு.கருணாநிதி

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

8 சிவயோகி சிவக்குமார்

அறிவு அழிவிலிருந்து காக்கும் கருவி பகை கொண்டவருக்கு உள்ளே வந்து அழிக்கமுடியாத அரண்.

More Kurals from அறிவுடைமை

அதிகாரம் 43: Kurals 421 - 430

Related Topics

Because you're reading about Wisdom & Intelligence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature