Kural 841

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

aRivinmai inmaiyuL inmai piRidhinmai
inmaiyaa vaiyaa thulaku.

🌐 English Translation

English Couplet

Want of knowledge, 'mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem.

Explanation

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

2 மணக்குடவர்

நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்: அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.

3 பரிமேலழகர்

இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இன்மையுள் இன்மை அறிவு இன்மை--ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; பிறிது இன்மை உலகு இன்மையா வையாது--மற்றச் செல்வமின்மையை உயர்ந்தோர் வறுமையாகக் கருதார். அறிவு என்னும் பொதுப்பெயர் இங்கு வழக்குப்பற்றி நல்லறிவைக் குறித்த்து. அறிவில்லார் செல்வம் பெற்றவிடத்தும் அதனாற் பெறக்கூடிய இம்மை மறுமைப் பேறுகளைப் பெறாமையின், அதை'இன்மையு ளின்மை' என்றும், அறிவாளர் வறியவராயிருந்த விடத்தும் இருமைப் பேறுகளையும் பெறுதலால் அதை 'இன்மையாவையாது' என்றும், கூறினார். 'இன்மைச் சொல் பின்னும் வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி' 'ஆக' என்னும் வினையெச்சவீறு கடைக்குறைந்து, நின்றது. 'உலகு' ஆகுபெயர்.

5 சாலமன் பாப்பையா

இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.

7 சிவயோகி சிவக்குமார்

அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது.

8 புலியூர்க் கேசிகன்

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.

More Kurals from புல்லறிவாண்மை

அதிகாரம் 85: Kurals 841 - 850

Related Topics

Because you're reading about Petty Mindedness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature