Kural 1098

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

asaiyiyaRku uNtaaNtoar Eeryaan noakkap
pasaiyinaL paiya nakum.

🌐 English Translation

English Couplet

I gaze, the tender maid relents the while;
And, oh the matchless grace of that soft smile!.

Explanation

When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

2 மணக்குடவர்

அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

3 பரிமேலழகர்

(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - தோழி என்னைச் சேட்படுத்துரைக்குஞ் சொற்காற்றாது யான் இரங்கி நோக்கியவிடத்து, அஃதறிந்து அன்பால் நெகிழ்ந்து மெல்ல நகுவாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - ஆதலால், அசையும் மெல்லியலாளாகிய என் காதலிக்கு அந்நகையின்கண் ஓர் அழகிய குறிப்புள்ளது. அக்குறிப்பால் என் வேணவா நிறைவேறும் என்று மகிழ்ந்தான் என்பதாம். 'அசையியல்' அன்மொழித்தொகை. 'ஏஎர்' இசைநிறையளபெடை. 'ஏர்' ஆகுபெயர்.

5 சாலமன் பாப்பையா

யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

7 சிவயோகி சிவக்குமார்

இணக்கம் உண்டா என்று மாணவனாகிய நான் நோக்கப் இசைவினால் உடனே சிரித்தாள்.

8 புலியூர்க் கேசிகன்

அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு.

More Kurals from குறிப்பறிதல் Love

அதிகாரம் 110: Kurals 1091 - 1100

Related Topics

Because you're reading about Reading Signs of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature