Kural 795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

azhachcholli alladhu idiththu vazhakkaRiya
vallaarnhatapu aaindhu koLal.

🌐 English Translation

English Couplet

Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.

Explanation

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

2 மணக்குடவர்

குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க. இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.

3 பரிமேலழகர்

அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

அல்லது இடித்து அழச்சொல்லி-நன்மையல்லாதது செய்தவிடத்துக் கண்டித்து மனம் வருந்துமாறு அறிவுரை கூறி; வழக்கு அறிய வல்லார்-உலக நடையறிந்து அதன்படி நடப்பிக்கும் திறமை யுடையவரை; ஆய்ந்து-ஆராய்ந்து கண்டு; நட்புக்கொளல்-அவரொடு நட்புக் கொள்க. 'அல்லது' நல்லதல்லாத தீவினை. இச்சொல் இப்பொருட்டாதலை 'அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல' (கலித். 148) என்பதனால் அறிக. நீண்டகாலமாக வழங்கிவருவது வழக்கு. அது இங்கு உயர்ந்தோர் ஒழுக்க வழக்கைக் குறித்தது. உலக நடையறிதல் அரிதாகலின் 'அறியவல்லார்' என்றார். 'அழ அழச்சொல்லுவார் தமர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் பிறர்' என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத்தக்கது.

5 சாலமன் பாப்பையா

நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

6 கலைஞர் மு.கருணாநிதி

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

துக்கம் மிகுந்து கண்ணிர் பெருக அல்லது கடுமையாய் கண்டித்து நன்மையை எடுத்துரைக்க வல்லார் நட்பை ஆராய்ந்து உறவு பாராட்ட வேண்டும்

More Kurals from நட்பாராய்தல்

அதிகாரம் 80: Kurals 791 - 800

Related Topics

Because you're reading about Testing Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature