எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.
Transliteration
echchamendru en-eNNunG kolloa oruvaraal
nachchap padaaa thavan.
🌐 English Translation
English Couplet
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.
Explanation
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
2 மணக்குடவர்
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.
3 பரிமேலழகர்
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) .
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவரால் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கால் - தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? மக்கள்,பொருள்,புகழ் என்னும் மூவகை யெச்சங்களுள், புகழே சிறந்ததாதலின் , ' என்னெண்ணுங் கொல்லோ ' என்றார். ஓகாரம் அசைநிலை. ' கொல் ' ஐயப் பொருளிடைச் சொல். 'படா.அ' இசைநிறை யளபெடை.இழிவு சிறப்பும்மை தொக்கது.
5 சாலமன் பாப்பையா
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.
6 கலைஞர் மு.கருணாநிதி
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
7 சிவயோகி சிவக்குமார்
மிச்சமாக இருக்கப் போவது ஏது என அறிவனோ? ஒருவராலும் விரும்பப்படாதவன்.
8 புலியூர்க் கேசிகன்
ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?
More Kurals from நன்றியில்செல்வம்
அதிகாரம் 101: Kurals 1001 - 1010
Related Topics
Because you're reading about Useless Wealth