Kural 1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

echchamendru en-eNNunG kolloa oruvaraal
nachchap padaaa thavan.

🌐 English Translation

English Couplet

Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.

Explanation

What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

2 மணக்குடவர்

ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.

3 பரிமேலழகர்

ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? (ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.) .

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஒருவரால் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கால் - தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? மக்கள்,பொருள்,புகழ் என்னும் மூவகை யெச்சங்களுள், புகழே சிறந்ததாதலின் , ' என்னெண்ணுங் கொல்லோ ' என்றார். ஓகாரம் அசைநிலை. ' கொல் ' ஐயப் பொருளிடைச் சொல். 'படா.அ' இசைநிறை யளபெடை.இழிவு சிறப்பும்மை தொக்கது.

5 சாலமன் பாப்பையா

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.

6 கலைஞர் மு.கருணாநிதி

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.

7 சிவயோகி சிவக்குமார்

மிச்சமாக இருக்கப் போவது ஏது என அறிவனோ? ஒருவராலும் விரும்பப்படாதவன்.

8 புலியூர்க் கேசிகன்

ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?

More Kurals from நன்றியில்செல்வம்

அதிகாரம் 101: Kurals 1001 - 1010

Related Topics

Because you're reading about Useless Wealth

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature