Kural 806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ellaikkaN nhindraar thuRavaar tholaividaththum
thollaikkaN nindraar thodarpu.

🌐 English Translation

English Couplet

Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.

Explanation

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

2 மணக்குடவர்

ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு.

3 பரிமேலழகர்

எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

எல்லைக்கண் நின்றார்-நட்புவரம்பு கடவாது. அதன் எல்லைக்குள் நிலைத்து நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு-பழைமையைத் தம்மோடு பழகிவந்து துன்பில் திரியாது நின்றவரின் நட்பை; தொலைவிடத்தும் துறவார்-அவரால் தமக்குக் கேடுவந்தவிடத்தும் விடார். 'தொல்லை' ஆகுபொருளி, 'தொலைவு' பொருட்கேடும் போர்த்தோல்வியும்.

5 சாலமன் பாப்பையா

நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

வாழ்வின் தேவைகளை கடந்து எல்லையில் நின்றவரும் துறக்கமாட்டார், தொல்லைகளை அழிக்க துணை நின்றவரின் தொடர்பை

More Kurals from பழைமை

அதிகாரம் 81: Kurals 801 - 810

Related Topics

Because you're reading about Old Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature