Kural 207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

enaippakai yutraarum uyvar vinaippakai
veeyaadhu pinsendru adum.

🌐 English Translation

English Couplet

From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.

Explanation

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

2 மணக்குடவர்

எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

3 பரிமேலழகர்

எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

எனைப் பகை உற்றாரும் உய்வர்-எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும். தீவினைப் பயனுக்குத் தப்ப முடியாதென்பதாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

எவ்வளவு பெரிய பகையுடையவர்களும் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க் கொல்லும்.

6 சாலமன் பாப்பையா

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

8 சிவயோகி சிவக்குமார்

எந்தவித எதிர்ப்பு பெற்றவரும் உயர்வடைவார். செயலால் வரும் எதிர்ப்போ ஓயாது சென்று விழ்த்தும்.

More Kurals from தீவினையச்சம்

அதிகாரம் 21: Kurals 201 - 210

Related Topics

Because you're reading about Fear of Sin

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature