எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.
Transliteration
enaiththitpam eythiyak kaNNum vinaiththitpam
vaeNdaarai vaeNdaadhu ulagu.
🌐 English Translation
English Couplet
The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest.
Explanation
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
2 மணக்குடவர்
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
3 பரிமேலழகர்
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
வினைத்திட்பம் வேண்டாரை-வினை செய்வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்-வேறு எத்தகைய உறுதி யுடையவரா யிருப்பினும்; உலகு வேண்டாது-உயர்ந்தோர் விரும்பார். மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்திண்மை, வினைத்திண்மை, என அகத்திண்மை பல வகைப்படும். கருவித்திண்மை, இடத்திண்மை, காலத்திண்மை, படைத்திண்மை முதலியன புறத்திண்மையாம். இவை யெல்லா மிருந்தும் மெய்ம் முயற்சியாகிய வினைத்திண்மை யில்லாவிடத்துப் பயன்படாமையின், ' வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாதுலகு' என்றார். 'உலகு' ஆகுபெயர்.
5 சாலமன் பாப்பையா
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
6 கலைஞர் மு.கருணாநிதி
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.
7 சிவயோகி சிவக்குமார்
எவ்வளவு உறுதியை அடைந்திருந்தாலும் செயல் துணிவு இல்லாதவரை உலகம் ஏற்காது.
More Kurals from வினைத்திட்பம்
அதிகாரம் 67: Kurals 661 - 670