Kural 1285

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ezhudhungaal koalkaanaak kannaepoal konkan
pazhikaanaen kanda idaththu.

🌐 English Translation

English Couplet

The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.

Explanation

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

2 மணக்குடவர்

கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் - மற்ற நேரமெல்லாங் காணக்கூடியதாயிருந்தும் , கண்ணிற்கு மைதீட்டும்போது மட்டும் தீட்டுக் கோலைக் காணமுடியாத கண்ணேபோல ; கண்டவிடத்துக் கொண்கன் பழிகாணேன்-கணவரைக் காணாத விடத்தெல்லாம் அவர் தவற்றைக் கண்டிருந்து . அவரைக் கண்ட விடத்து மட்டும் அதைக் காணவியலாது போகின்றேன்.

5 சாலமன் பாப்பையா

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

7 சிவயோகி சிவக்குமார்

மை தீட்டும் பொழுது அந்த கோலை காணாத கண் போல் கொண்டவரின் குற்றத்தை காணது போகிறது அவரை பார்த்த உடன்.

8 புலியூர்க் கேசிகன்

மை எழுதும் போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே!

More Kurals from புணர்ச்சிவிதும்பல்

அதிகாரம் 129: Kurals 1281 - 1290

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature