இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு.
Transliteration
idamellaam koLLaath thakaiththae idamillaak
kaalum iravollaach chaalpu.
🌐 English Translation
English Couplet
Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth.
Explanation
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
2 மணக்குடவர்
தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து. இஃது இரவாதார் பெரிய ரென்றது.
3 பரிமேலழகர்
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு-ஒரு சிறிதும் பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு; இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-உலகங்களெல்லாம் ஒன்றாகக் கூடினும் அவற்றில் இட்டுவைக்கும் இடமெல்லாம் கொள்ளாத பெருமையை யுடையதாம். மானமும் பெருமையும் நாணும் சால்பின் உறுப்புக்களாதலின், அவை இரவை அறவே தடுக்குமென்பதாம். இடம் உலகில்வாழ இடந்தருஞ் செல்வம். இடம்-இடன், கடைப்போலி. "இடனில் பருவத்தும்" (குறள்,218) என்றமை காண்க. ஏகாரம் தேற்றம், உம்மை இழிவு சிறப்பு.
5 சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
6 கலைஞர் மு.கருணாநிதி
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.
7 சிவயோகி சிவக்குமார்
இருக்கும் இடம் முழுவதும் போதுமானது இல்லை தனக்கு இடம் இல்லை என்று இரந்து கேட்காதவரின் முன்மாதிரியான பண்புக்கு.
8 புலியூர்க் கேசிகன்
நுகர் பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.
More Kurals from இரவச்சம்
அதிகாரம் 107: Kurals 1061 - 1070
Related Topics
Because you're reading about Shame of Begging