Kural 988

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

inmai oruvaRku iLivandru saalpennum
thiNmai-uN daakap peRin.

🌐 English Translation

English Couplet

To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.

Explanation

Poverty is no disgrace to one who abounds in good qualities.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

2 மணக்குடவர்

ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.

3 பரிமேலழகர்

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவற்கு; இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமை இழிவாகாது. உள்ளத்திற்கு உறுதியுண்டாக்குதலின், சால்பு உரமாயிற்று. இன்மை பொருளின்மை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" (மூதுரை,4) என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

6 கலைஞர் மு.கருணாநிதி

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

7 சிவயோகி சிவக்குமார்

இன்னல்கள் ஒருவருக்கு இழுவானது இல்லை பெருந்தன்மை என்ற சால்பு திடமாக உண்டானால்.

8 புலியூர்க் கேசிகன்

‘சால்பு உடைமை’ என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.

More Kurals from சான்றாண்மை

அதிகாரம் 99: Kurals 981 - 990

Related Topics

Because you're reading about Nobility

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature