இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
Transliteration
inmaiyin innaadhadhu yaadhenin inmaiyin
inmaiyae innaa thadhu.
🌐 English Translation
English Couplet
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.
Explanation
There is nothing that afflicts (one) like poverty.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
2 மணக்குடவர்
நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.
3 பரிமேலழகர்
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இன்மையின் இன்னாதது யாது எனின்- ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே- வருமையைப் போலத் துன்பந்தருவது வறுமையே, வேறொன்றுமில்லை. ஒப்பதின்மை மிக்க தின்மையையும் உடனுணர்த்திற்று. இதில் வந்துள்ள சொல்லணி சொற்பொருட் பின் வருநிலை; பொருளணி தன்னுவமை.
5 சாலமன் பாப்பையா
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
6 கலைஞர் மு.கருணாநிதி
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
7 சிவயோகி சிவக்குமார்
இல்லாமையைவிட துன்பமானது என்ன என்றால் இல்லாமையில் இல்லாமையே துன்பமானது. (வறுமையை விட கொடியது வறுமையே).
8 புலியூர்க் கேசிகன்
ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty