Kural 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

iraththalum eedhalae poalum karaththal
kanavilum thaetraadhaar maattu.

🌐 English Translation

English Couplet

Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.

Explanation

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

2 மணக்குடவர்

கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.

3 பரிமேலழகர்

கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கனவிலும் கரத்தல் தேற்றாதார் மாட்டு-தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; இரத்தலும் ஈதலே போலும்-ஒன்றை யிரத்தலும் வறியார்க் கொன்றீதலே போலும்! இரந்த பொருள் இழிவுந் துன்பமுமின்றி வருதலாலும், ஈவோனுக்குப் புகழைக் கொடுத்தலாலும், ’இரத்தலும் ஈதலே போலும்’ என்றார். உம்மை யிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது எச்சம். ஏகாரம் ஈற்றசை.

5 சாலமன் பாப்பையா

ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

6 கலைஞர் மு.கருணாநிதி

இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

கேட்பதும் கொடுப்பதைப் போன்றதே வெறுப்பை கனவிலும் காட்டதவர் இடத்தில்.

8 புலியூர்க் கேசிகன்

தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும்.

More Kurals from இரவு

அதிகாரம் 106: Kurals 1051 - 1060

Related Topics

Because you're reading about Begging

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature