காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை.
Transliteration
kaamak kadumpunal uykkum naaNodu
nallaaNmai ennum puNai.
🌐 English Translation
English Couplet
Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.
Explanation
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
2 மணக்குடவர்
யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.
3 பரிமேலழகர்
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
( நாணும் நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகவின் , அதனால் அவை நீங்குவனவல்ல என்ற தோழிக்குத் தலை மகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை என்னும் புணை - நான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை ; காமக் கடும்புனல் உய்க்குமே - காமமாகிய பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றதே ! நான் என்செய்வேன் !. புணையென்றது மிதவையும் கட்டுமரமும் பரிசலுந் தெப்பமும் போண்ற கடத்தக் கருவிகளை . அவற்றை என்னோடு அடித்துக்கொண்டு போகுமளவு வெள்ளம் பெருக்கும் வேகமுங் கொண்ட தென்பது தோன்றக் ' கடும்புனல் ' என்றாள் . ஏகாரம் இரங்கற் பொருட்டு .
5 சாலமன் பாப்பையா
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
7 சிவயோகி சிவக்குமார்
காமம் என்ற கடுமையான நீர் பெருக்கு அழித்துவிடும் வாழ வைக்கும் நாணத்துடன் நல்ல ஆண்மை என்னும் தோணியை.
8 புலியூர்க் கேசிகன்
நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்!
More Kurals from நாணுத்துறவுரைத்தல்
அதிகாரம் 114: Kurals 1131 - 1140