Kural 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaaNaadhaan kaattuvaan thaan-kaaNaan kaaNaadhaan
kaNtaanaam thaan-kaNda vaaRu.

🌐 English Translation

English Couplet

That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows.

Explanation

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

2 மணக்குடவர்

அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.

3 பரிமேலழகர்

காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

காணாதாற் காட்டுவான் தான் காணான்- தன்னைப் பேரறிவாளனாகக் கருதுவதால் பிறர் வாயிலாக ஒன்றறியுந் தன்மையில்லாத புல்லறிவாளனுக்கு அறிவு புகட்டப் புகுந்தவன் அவனாற் பழிக்கப்பட்டுத் தான் அறியாதவன் என்னும் நிலைமையையே அடைவன்; காணாதான் தான் கண்டவாறு கண்டான் ஆம்- அவ்வறியுந்தன்மை இல்லாதவனோ, தான் அறிந்தவகையே சரியென்று நம்புவதால் , இறுதியில் தான் முன்பு அறிந்தவாறே அறிந்தவனாக முடியும். புல்லறிவாளனுக்கு நல்லறிவு கொளுத்தும் வகை இல்லையென்றவாறு. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

5 சாலமன் பாப்பையா

அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

6 கலைஞர் மு.கருணாநிதி

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

7 சிவயோகி சிவக்குமார்

கண்டு உணராமலேயே இப்படி என்று விளக்கிக் காட்டுவான் ஆனால் தான் கண்டு உணர முற்படமாட்டான். கண்டு உணரமுடியாதவன் உணர்வது தன்னால் கண்டு உணரும் அளவிற்கே.

8 புலியூர்க் கேசிகன்

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்

More Kurals from புல்லறிவாண்மை

அதிகாரம் 85: Kurals 841 - 850

Related Topics

Because you're reading about Petty Mindedness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature