Kural 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kalangaadhu kaNda vinaikkaN thuLangaadhu
thookkanG katindhu seyal.

🌐 English Translation

English Couplet

What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil.

Explanation

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

2 மணக்குடவர்

கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

3 பரிமேலழகர்

கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தௌ¤ந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தௌ¤ந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கலங்காது கண்ட வினைக்கண்-தெளிவாக எண்ணித்துணிந்த வினை முயற்சியில்; துளங்காது தூக்கம் கடிந்து செயல்-பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செய்க. தப்பாது பயன் படுமென்றும் வெற்றியாக முடியுமென்றும் தெளிவாக ஆராய்ந்தறிந்த வினையைக் 'கலங்காது கண்ட வினை' யென்றும், மனத்தளர்ச்சியும் உடற்சோம்பலும் வினையைக் கெடுக்கு மாதலின் 'துளங்காது தூக்கங் கடிந்து செயல்' என்றும், கூறினார்.

5 சாலமன் பாப்பையா

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

6 கலைஞர் மு.கருணாநிதி

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

குழப்பம் இல்லாமல் எடுத்த செயல்களை துவண்டுவிடாமல் தூக்கத்தையும் வெறுத்து செய்து முடிக்கவேண்டும்.

More Kurals from வினைத்திட்பம்

அதிகாரம் 67: Kurals 661 - 670

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature