Kural 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kallaa oruvan thakaimai thalaippeydhu
sollaatach soarvu padum.

🌐 English Translation

English Couplet

As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.

Explanation

The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

2 மணக்குடவர்

கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

3 பரிமேலழகர்

கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும். ('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கல்லா ஒருவன் தகைமை-நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும்; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் -அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது கெட்டுப்போம். கற்றவன் என்பது அவாய்நிலையான் வந்தது. "காணாமல் வேணதெல்லாங் கத்தலாங் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே-நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி" என்னும் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனியன் இக்குறட் பொருளை விளக்குவதாகும்:

5 திருக்குறளார் வீ. முனிசாமி

நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனொன்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.

6 சாலமன் பாப்பையா

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

8 சிவயோகி சிவக்குமார்

கல்லாத ஒருவர் ஆர்வப்பட்டு முன்னின்று பேசினால் கேட்பவர்களுக்கு சோர்வு ஏற்படும்

More Kurals from கல்லாமை

அதிகாரம் 41: Kurals 401 - 410

Related Topics

Because you're reading about Ignorance

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature