கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர்.
Transliteration
kaNNuLLin poakaar imaippin parukuvaraa
nuNNiyar-em kaadha lavar.
🌐 English Translation
English Couplet
My loved one's subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies.
Explanation
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
2 மணக்குடவர்
என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.
3 பரிமேலழகர்
(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(ஒருவழித் தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிப் பாளென்றஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது . ) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் ஒருபோதும் கண்ணகத்து நின்றும் நீங்கார் ; இமைப்பின் பருவரார் - யாம் அதை மறந்து ஒருகால் இமைத்தோமாயினும் அதனால் வருத்தமுறார் , நுண்ணியர் - அத்துணைக் கட்புலனாகாத நுண்மை யுடையவர் அவர் . தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் சென்றாரெனக் கருதுவார் கருதுக ; ஆயின் , யான் இடைவிடாது காணுதலின் அங்ஙனங் கருதேன் என்றவாறு . இடையறாத நினைவு முதிர்ச்சியால் என்றுங் கண்முன் நிற்றல்போல் தோன்றலாற் ' கண்ணுள்ளிற் போகார் ' என்றும் , இமைத்த போதும் அது நீங்காமையால் ' இமைப்பிற் பருவரார் ' என்றும் , கூறினாள் .
5 சாலமன் பாப்பையா
என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
7 சிவயோகி சிவக்குமார்
கண்களை மூடினாலும் மறைந்து போகமாட்டார் ஆகையால் இமைப்பதால் விலகமாட்டார் அவ்வளவு நுட்பமானவர் என் காதலவர்.
8 புலியூர்க் கேசிகன்
எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒரு போதுமே நீங்கார்; எம் கண்களை இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்,
More Kurals from காதற்சிறப்புரைத்தல்
அதிகாரம் 113: Kurals 1121 - 1130
Related Topics
Because you're reading about Excellence of Love