Kural 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

koduppadhooum thuyppadhooum illaarkku adukkiya
koatiyuN daayinum il.

🌐 English Translation

English Couplet

Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

Explanation

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

2 மணக்குடவர்

பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.

3 பரிமேலழகர்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு -பிறருக்கீவதும் தாம் நுகர்வது மாகிய இரண்டுமில்லாதவருக்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்-கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது. செல்வத்தின் இரு பயனுமின்மையால் ' இல் ' என்றார். இன்பத்தினும் அறஞ் சிறந்தமையால் முற்கூறப்பட்டது. ' கோடி' அளவையாகு பெயர். ' கொடுப்பதூஉம் ' , ' துய்ப்பதூஉம் ' இன்னிசை யளபெடைகள்.உம்மை உயர்வு சிறப்பு. "எனதென தென்றிருக்கு மேழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது" (நாலடி.276) என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

5 சாலமன் பாப்பையா

தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

கொடுத்து மகிழ்வதும் அனுபவித்து மகிழ்வதும் இல்லாதவருக்கு தொடர்ந்து செல்வம் கோடி உண்டாயினும் வீண்.

8 புலியூர்க் கேசிகன்

இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.

More Kurals from நன்றியில்செல்வம்

அதிகாரம் 101: Kurals 1001 - 1010

Related Topics

Because you're reading about Useless Wealth

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature