Kural 699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

koLappattaem endreNNik koLLaadha seyyaar
thuLakkatra kaatchi yavar.

🌐 English Translation

English Couplet

'We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.

Explanation

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

2 மணக்குடவர்

யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தௌ¤வுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.

3 பரிமேலழகர்

கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

துளக்கு அற்ற காட்சியவர்-நிலைத்த உறுதியான அறிவினையுடையார்;கொளப்பட்டோம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார்-யாம் அரசனால் மதிப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டேம் என்று கருதித் தம் நிலைமையொடு பொருந்தாதவற்றைச் செய்யார். நிலைமை யுயர்ந்தபின் தம் பழைய நிலைமையை நினைத்து முன் போன்றே தாழ்மையாய் ஒழுகாது, "நன்னிக்குப் பதவி வந்தால் நள்ளிரவிற் குடைபிடிப்பான்." என்பதற் கிணங்கத் தலைகால் தெரியாது நடப்பவரே உலகத்துப் பலராதலின், என்றும் ஒரு தன்மையராக விருந்து மன்னர் விழைப விழையாது அவரிடத்து நின்ற வொளியோ டொழுகுபவரைத் 'துளக்கற்ற காட்சியர்' என்றார். காட்சி என்றது அகக்காட்சியை.

5 சாலமன் பாப்பையா

சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டர் என்பதற்காக ஏற்க முடியாததை செய்யமட்டார் தெளிந்த பார்வை உள்ளவர்.

More Kurals from மன்னரைச் சேர்ந்தொழுதல்

அதிகாரம் 70: Kurals 691 - 700

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature