Kural 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kollaa nalaththadhu noanmai piRardheemai
sollaa nalaththadhu saalpu.

🌐 English Translation

English Couplet

The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.

Explanation

Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

2 மணக்குடவர்

தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும் கொல்லாத நலத்தையுடையது தவம். அதுபோலச் சாண்றாண்மைக்கு உறுப்பான நற்குணங்கள் பல உண்டாயினும் பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு.

3 பரிமேலழகர்

நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நோன்மை கொல்லாமையைத் தனக்குரிய அறங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது- அதுபோலச் சான்றாண்மை பிறர் குற்றத்தைச் சொல்லாமையைத் தனக்குரிய குணங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது. 'நலம்' ஆகுபொருளது. இக்குறள் எடுத்துக்காட்டுவமை.

5 சாலமன் பாப்பையா

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

6 கலைஞர் மு.கருணாநிதி

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

7 சிவயோகி சிவக்குமார்

அழிக்காமல் நலமுடன் வாழவைப்பதே நோன்பு. அடுத்தவரின் தீயச் செயல்களை சொல்லாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்வதே சால்பு.

8 புலியூர்க் கேசிகன்

‘தவம்’ ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்து.

More Kurals from சான்றாண்மை

அதிகாரம் 99: Kurals 981 - 990

Related Topics

Because you're reading about Nobility

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature