Kural 1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kulanjudum koLkai pizhaippin nalanjudum
naaNinmai nindrak kadai.

🌐 English Translation

English Couplet

'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail.

Explanation

Want of manners injures one's family; but want of modesty injures one's character.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

2 மணக்குடவர்

ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.

3 பரிமேலழகர்

கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவன் தன் கொள்கை தவறி யொழுகின் , அத்தவறு அவன் குடிப்பிறப்பை மட்டும் கெடுக்கும்; நாண் இன்மை நின்றக்கடை நலம் சுடும் - ஆயின் , ஒருவனிடத்து நாணின்மை நிலைத்து நின்றவிடத்தோ , அந்நிலைப்பு அவன் நலம் எல்லாவற்றையுங் கெடுத்துவிடும். கொள்கையாவது குடியுயர்வைப் பேணும் நெறிமுறை. 'நலம்.' வகுப்பொருமை . நலவகைகள்பிறப்பு, இயற்கையறிவு, கல்வி,பண்பு செயல் முதலியன.ஒழுக்கமின்மையினும் நாணின்மை மிகத் தீயது என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

7 சிவயோகி சிவக்குமார்

குலப் பெருமை அழியும் கொள்கை தவறாக இருந்தால். நலம் கெட்டுப் போகும் நாணுடைமை இல்லாமல் நிற்கும் யாருக்கும்.

8 புலியூர்க் கேசிகன்

ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.

More Kurals from நாணுடைமை

அதிகாரம் 102: Kurals 1011 - 1020

Related Topics

Because you're reading about Modesty

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature