Kural 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kutippiRandhu than-kaN pazhinhaaNu vaanaik
kotuththum koLalvaeNdum natpu.

🌐 English Translation

English Couplet

Who, born of noble race, from guilt would shrink with shame,
Pay any price so you as friend that man may claim.

Explanation

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

2 மணக்குடவர்

மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

3 பரிமேலழகர்

குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது. (குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானை-உயர் குடியிற் பிறந்து தன்னைப்பற்றி உலகங்கூறும் பழிக்கு அஞ்சுபவனை; கொடுத்தும் நட்புக்கொளல் வேண்டும்-அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாயினும் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும். பல தலைமுறையாகப் பண்பட்டுவந்த குடியிற் பிறந்தவன், அக்குடிப் பண்பாட்டைக் காப்பவனாகவும் தன் குற்றத்தால் அக்குடிக்கு நேரும் பழிக்கு அஞ்சுபவனாகவும் இருப்பனாதலால் கொடுத்துங் கொளல் வேண்டும் நட்பு என்றார். நட்புத் தகுதிக்குக் குடிப்பிறப்புச் சிறந்ததென்பது இதனாற் கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

வாழும் முறை அறிந்த இடத்தில் பிறந்து, தனக்கு பழி நேர அஞ்சுபவரை பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

More Kurals from நட்பாராய்தல்

அதிகாரம் 80: Kurals 791 - 800

Related Topics

Because you're reading about Testing Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature