Kural 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

maalainoi seydhal manandhaar akalaadha
kaalai arindha thilen.

🌐 English Translation

English Couplet

The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.

Explanation

Previous to my husband's departure, I know not the painful nature of evening.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

2 மணக்குடவர்

மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.

3 பரிமேலழகர்

('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

[இன்று இங்ஙன மாகின்ற நீ அவர் பிரிவிற் குடம்பட்ட தெங்ஙனம் என்ற தோழிக்குச் சொல்லியது.] மாலை நோய் செய்தல் -முன்பெல்லாம் எனக்கு இன்பஞ் செய்து வந்த மாலை. அதற்கு நேர்மாறாக இன்று துன்பஞ் செய்யு மென்பதை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்-காதலர் பிரிவிற்கு முன் நான் அறியவே யில்லை. அறிந்திருந்தேனாயின் அவர் பிரிவிற்கு உடம்பட் டிரேன் என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

மாலைப் பொழுது தரும் நோய் எப்படிப்பட்டது என்று மணந்தவர் என்னை விட்டு விலகாத காலத்தில் அறியாமல் இருந்தேன்.

8 புலியூர்க் கேசிகன்

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே!

More Kurals from பொழுதுகண்டிரங்கல்

அதிகாரம் 123: Kurals 1221 - 1230

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature