Kural 1253

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

maraippaenman kaamaththai yaanoa kurippindrith
thummalpoal thoandri vidum.

🌐 English Translation

English Couplet

I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.

Explanation

I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

2 மணக்குடவர்

காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

3 பரிமேலழகர்

(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

[மகளிர் காமம் மறைக்கப்படுமென்ற தோழிக்குச் சொல்லியது.] யான் காமத்தை மறைப்பேன்- யான் இக்காமத்தை என்னுள்ளே அடக்கிவைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றிவிடும்- ஆனால், அது என் கருத்துவழி நிற்காமல் தும்மல் போலத் திடுமென்று வெளிப்பட்டு விடுகின்றது. தும்மல்போலக் காமமும் அடங்குகின்றதில்லை யென்பதாம் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு.

5 சாலமன் பாப்பையா

என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

7 சிவயோகி சிவக்குமார்

மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி தும்மல் போல் தோன்றிவிடுமே.

8 புலியூர்க் கேசிகன்

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

More Kurals from நிறையழிதல்

அதிகாரம் 126: Kurals 1251 - 1260

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature