Kural 1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

marappin evanaavan markol marappariyaen
ullinum ullam sudum.

🌐 English Translation

English Couplet

If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!.

Explanation

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.

2 மணக்குடவர்

அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அக் கூட்டக்காலை யின்பத்தை ஒருபோதும் மறத்தலறியேனாய் இன்று அதை நினைக்கும்போது கூட; பிரிவுத் துன்பம் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! மறப்பின் எவன் ஆவன் - இனி, அதை அடியோடு மறந்துவிடின் நான் என்ன நிலைமையடைவேனோ! இறைவன்தான் அறிவான். மறத்தற்கும் உள்ளுதற்கும் செயப்படுபொருள் அதிகாரத்தாலும் மேற்குறளினின்றும் வந்தது. 'மன்' நான் உயிர்வாழ வேறொரு வழியும் பெற்றிலேன் என்பது பட நின்றமையின் ஒழியிசைக்கண் வந்தது. 'கொல்' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.

6 கலைஞர் மு.கருணாநிதி

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.

7 சிவயோகி சிவக்குமார்

மறந்தால் என்ன ஆவேனோ? என்பதால் மறப்பதை அறியவில்லை. மற்றபடி நினைப்பும் என் நெஞ்சத்தை சுடுகிறது.

8 புலியூர்க் கேசிகன்

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே!

More Kurals from நினைந்தவர்புலம்பல்

அதிகாரம் 121: Kurals 1201 - 1210

Related Topics

Because you're reading about Lamenting the Beloved

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature