Kural 1274

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

mukaimokkul ulladhu naatrampoal paedhai
nakaimokkul ulladhon rundu.

🌐 English Translation

English Couplet

As fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel's eyes.

Explanation

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

2 மணக்குடவர்

மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல்-மொட்டின் முகப்பிற்குள் அடங்கிக் கிடந்து வெளியிற் பரவாத மணம் போல ; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு-என் இளங்காதலியின் நகை யரும்பும் முறுவலுக்குள் உள்ளதாய் வெளியில் தோன்றாத தொரு குறிப்புண்டு. நகை புணர்ச்சி யின்பத்தால் தோன்றும் மகிழ்ச்சி வெளிப்பாடு.

5 சாலமன் பாப்பையா

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

7 சிவயோகி சிவக்குமார்

மலரத் துடிக்கும் மொட்டில் உள்ள வாசனைப் போல் சிறு பெண்ணின் சிரிப்புக்குள் ஒன்று உண்டு.

8 புலியூர்க் கேசிகன்

அரும்பினுள்ளே அடங்கியிருக்கின்ற மணத்தைப் போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது.

More Kurals from குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128: Kurals 1271 - 1280

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature