Kural 1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

naamkaadhal kontaar namakkevan seypavo
thaamkaadhal kollaak kadai.

🌐 English Translation

English Couplet

From him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me?.

Explanation

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.

2 மணக்குடவர்

நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.

3 பரிமேலழகர்

('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்தாற்றினாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார்-நம்மாற் காதல் செய்யப்பட்டவர் ;தாம் காதல் கொள்ளாக்கடை-அவ்வாறே தாமும் நம்மிடத்துக் காதல் செய்யாவிடத்து ; நமக்கு எவன் செய்ப-நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்? அக்காதலால் நாம் பெற்றது துன்பமே யென்பதாம். எச்சவும்மை தொக்கது. 'ஓ' அசைநிலை

5 சாலமன் பாப்பையா

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?.

6 கலைஞர் மு.கருணாநிதி

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?.

7 சிவயோகி சிவக்குமார்

நாம் காதல் கொண்ட அவர் நமக்கு என்ன செய்ய முடியும் தான் காதல் கொள்ளவில்லை என்றால்.

8 புலியூர்க் கேசிகன்

நாம் காதல் கொண்டவர், நம் மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத் தான் செய்யப் போகின்றார்!

More Kurals from தனிப்படர்மிகுதி

அதிகாரம் 120: Kurals 1191 - 1200

Related Topics

Because you're reading about Excessive Longing

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature