Kural 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

nakudhaR poruttandru nattal mikudhikkaN
maeRsenaru itiththaR poruttu.

🌐 English Translation

English Couplet

Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray.

Explanation

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

2 மணக்குடவர்

ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.

3 பரிமேலழகர்

நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நட்டல் நகுதல் பொருட்டு அன்று-ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் சிரித்து மகிழ்வதற்கன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு-இருவருள் ஒருவர் தம் அறிவுக்குறைவால் ஏதேனும் வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை அறிவுநிறைந்த இன்னெருவர் முற்பட்டுக் கடிந்து திருத்தற்பொருட்டே. ஒழுக்க வரம்பிற்கு மிஞ்சியதை 'மிகுதி' யென்றும், அதனாற் கெடுமுன் அல்லது தண்டனையடையுமுன் திருத்தவேண்டுதலின் 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு வயப்படாமையின் 'இடித்தற் பொருட்டு' என்றும், கூறினார். இதனால் நட்பின் நோக்கங் கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

7 சிவயோகி சிவக்குமார்

மகிழ்வது மட்டுமே அவசியம் இல்லை. நட்டம் அதிகமாகமல் இருக்க தட்டிக் கேட்பதே நட்புக்கு அவசியம்.

More Kurals from நட்பு

அதிகாரம் 79: Kurals 781 - 790

Related Topics

Because you're reading about Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature