நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.
Transliteration
nanavinaal nalkaa thavaraik kanavinaal
kaantalin unten uyir.
🌐 English Translation
English Couplet
Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!.
Explanation
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
2 மணக்குடவர்
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவேன் என்பது படச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து கூடி யின்பந்தராதவரை கனவினாற்காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கட் கண்ட காட்சியால் என் உயிர் தழைக்கின்றது . அக்காட்சியால் யான் ஆற்றியுள்ளேன். நீகவல வேண்டிய தில்லை என்பதாம். மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்து மயங்கின.
5 சாலமன் பாப்பையா
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
6 கலைஞர் மு.கருணாநிதி
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
7 சிவயோகி சிவக்குமார்
நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில் கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.
8 புலியூர்க் கேசிகன்
நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது.
More Kurals from கனவுநிலையுரைத்தல்
அதிகாரம் 122: Kurals 1211 - 1220
Related Topics
Because you're reading about Dreams of Love