நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
Transliteration
nayanilan enpadhu sollum payanila
paarith thuraikkum urai.
🌐 English Translation
English Couplet
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
Explanation
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
2 மணக்குடவர்
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
3 பரிமேலழகர்
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் - அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும். அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் 'சொல்லும்' என்றார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுப்படுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும்.
6 சாலமன் பாப்பையா
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது பயனற்றதை விரிவாக பேசுவதே உரைத்துவிடும்.
More Kurals from பயனில சொல்லாமை
அதிகாரம் 20: Kurals 191 - 200
Related Topics
Because you're reading about Useful Speech