நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
Transliteration
noakkinaaL noakki iRainjinaaL aqdhavaL
yaappinuL attiya neer.
🌐 English Translation
English Couplet
She looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed! .
Explanation
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
2 மணக்குடவர்
முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர். தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
3 பரிமேலழகர்
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகள் காதலை நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள்- நான் நோக்காதபோது அவள் என்னை அன்புடன் நோக்கினாள் ;நோக்கி இறைஞ்சினாள்- அங்ஙனம் நோக்கினவள் உடனே ஒன்றைக் கருதி நாணங்கொண்டு என்னை வணங்குவாள் போலத் தலைகுனிந்தாள்; அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் -அச்செயல் எம் மிருவேமையும் பிணிக்கும் காதற்பயிர் வளர அவள் வார்த்த நீராகும். யாக்கும் அன்பை யாப்பென்றார்.யாப்பைப் பயிராக வுருவகியாமையின் இது ஒரு மருங்குருவகம்.
5 சாலமன் பாப்பையா
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
7 சிவயோகி சிவக்குமார்
பார்த்தாள் பார்த்து வணக்கமுடன் குனிந்தால் (இறைஞ்சினாள்) அச்செயல் காதல் பயிர் வளர பாய்ச்சிய நீர்.
8 புலியூர்க் கேசிகன்
அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள் போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று.
More Kurals from குறிப்பறிதல் Love
அதிகாரம் 110: Kurals 1091 - 1100
Related Topics
Because you're reading about Reading Signs of Love