ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.
Transliteration
ompin amaindhaar pirivoampal matravar
neengin aridhaal puNarvu.
🌐 English Translation
English Couplet
If you would guard my life, from going him restrain
Who fills my life! If he depart, hardly we meet again.
Explanation
If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
2 மணக்குடவர்
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல்-தோழி! நீ என்னுயிரைப் பேணிக்காப்பாயாயின், அதற்கு இன்றியமையாத் துணைவராக அமைந்தவரின் பிரிவு நேராமற் காப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது-பின்பு அவர் செலவழுங்குவாரின்றிச் சென்று விடின், என் உயிருஞ் சென்றுவிடும்; அதன்பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். 'அமைந்தார்' என்னுஞ்சொல் இறைவன் ஏற்பாட்டின்படி அமைந்தவர் என்னுங் குறிப்பினது. (ஒ. நோ; 'marriages are made in heaven.) 'மற்று' பின்மை அல்லது வினைமாற்றுப் பொருளில் வந்தது.
5 சாலமன் பாப்பையா
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
உறவு பாராட்டுபவர் பிரிவு எற்படாதபடி உறவு பாராட்டவேண்டும் மற்றபடி விலகிவிட்டால் அரிதாகிவிடும் கூடுதல்.
8 புலியூர்க் கேசிகன்
என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.
More Kurals from பிரிவாற்றாமை
அதிகாரம் 116: Kurals 1151 - 1160
Related Topics
Because you're reading about Pain of Separation