ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று.
Transliteration
oodalin untaangoar thunpam punarvadhu
needuva thandrukol endru.
🌐 English Translation
English Couplet
A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'.
Explanation
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
2 மணக்குடவர்
குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) புணர்வது நீடுவது(கொல்) அன்றுகொல் என்று-இனிப் புணர்ச்சி காலந்தாழ்க்குமோ தாழ்க்காதோ என்று கருதுதலால் ; ஊடலின் ஒர் துன்பம் உண்டு-இன்பத்திற்கேதுவான ஊடலிலும் ஒரு துன்பமுள்ளதாம். விரைந்து கூடற்கேதுவான ஊடலே பயன்தருவதென்பதாம் . கருதுதலால் என்பது அவாய்நிலையால் வந்தது . -சிறப்பும்மை தொக்கது . ' கொல்' முன்னுங் கூட்டப்பட்டது . ' ஆங்கு ' அசைநிலை.
5 சாலமன் பாப்பையா
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
6 கலைஞர் மு.கருணாநிதி
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.
7 சிவயோகி சிவக்குமார்
சிறு பிணக்கால் துன்பம் உண்டு என்றால் அது கூடி மகழும் காலத்தை குறைத்து விடுமோ என்பதே.
8 புலியூர்க் கேசிகன்
ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்.
More Kurals from புலவி
அதிகாரம் 131: Kurals 1301 - 1310
Related Topics
Because you're reading about Lovers' Quarrel