Kural 357

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

OrththuLLam uLLadhu uNarin orudhalaiyaap
paerththuLLa vaeNdaa piRappu.

🌐 English Translation

English Couplet

The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell.

Explanation

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

2 மணக்குடவர்

உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.

3 பரிமேலழகர்

உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - மெய்யோதியர்பாற் கேட்ட செவியறிவுறுத்தப் பொருளை ஓர் ஓகியின் உள்ளம் உத்தியானும் அளவைகளானும் தெளியவாராய்ந்து உண்மைப் பொருளை யுணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மீண்டுப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டியதில்லை, ஓதியர் = ஞானியர் (வ.) ஒகி = யோகி(வ.) அவைகள் முன்னரே 242-ஆம் குறளுரையிற் கூறப்பட்டன. இங்குத் தெளிவு கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

6 கலைஞர் மு.கருணாநிதி

உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

உள்ளாத்தால் ஆராய்ந்து உள்ளதை உணர்ந்தால் ஒருபக்கமாய் பிளவுப் பட்டுள்ள பிறப்பு தேவைப்படாது.

More Kurals from மெய்யுணர்தல்

அதிகாரம் 36: Kurals 351 - 360

Related Topics

Because you're reading about True Knowledge

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature