Kural 1189

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pasakkaman pattaangen maeni nayappiththaar
nannilaiyar aavar enin.

🌐 English Translation

English Couplet

Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!.

Explanation

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

2 மணக்குடவர்

என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின்-இப்பிரிவிற்கு யான் உடம்படும்வகை பசப்பியவர் இன்று உன் கருத்துப்படி குற்றமற்றவராயின்; என்மேனி பட்ட ஆங்கு பசக்க-என் மேனி இன்று பசந்தபடியே பசக்க. இப்பிரிவின் கொடுமையை இதற்குமுன் பட்டறியாத என்னை இதற்குடன்படுத்திப் பிரிந்தவர், எவ்வகையிலுங் குற்றமற்றவரென்று நாட்டுவதுதானே உன் விருப்பம்! அங்ஙனமாயின், என் மேனியையும் பசலையையுங் கவனிப்பானேன்? அவை எங்ஙனமிருந்தால் தானென்ன என்பது பட நின்றமையின் 'மன்' ஒழியிசை பற்றி வந்தது.

5 சாலமன் பாப்பையா

இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.

6 கலைஞர் மு.கருணாநிதி

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.

7 சிவயோகி சிவக்குமார்

உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர் நல்ல நிலை உடையவர் என்றால்.

8 புலியூர்க் கேசிகன்

‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக!

More Kurals from பசப்புறுபருவரல்

அதிகாரம் 119: Kurals 1181 - 1190

Related Topics

Because you're reading about Pallor of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature