Kural 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

patri vitaaa idumpaikaL patrinaip
patri vitaaa thavarkku.

🌐 English Translation

English Couplet

Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.

Explanation

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

2 மணக்குடவர்

பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.

3 பரிமேலழகர்

பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பற்றினைப் பற்றி விடாதவர்க்கு -இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; இடும்பைகள் பற்றி விடா - பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை. 'விடாஅ' ஈரிடத்தும் இசைநிறையளபெடை. 'விடாஅ தவர்க்கு வேற்றுமை மயக்கம். பற்று விடாதார்க்கு வீடில்லை யென்பதாம்.

5 சாலமன் பாப்பையா

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

6 கலைஞர் மு.கருணாநிதி

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

7 சிவயோகி சிவக்குமார்

பற்றி விடாது தொல்லைகள் பற்றினை பற்றி விடாத மனிதர்களுக்கு.

More Kurals from துறவு

அதிகாரம் 35: Kurals 341 - 350

Related Topics

Because you're reading about Renunciation

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature