Kural 801

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pazhaimai enappaduvadhu yaadhenin yaadhum
kizhamaiyaik keezhndhitaa natpu.

🌐 English Translation

English Couplet

Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act

Explanation

Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

2 மணக்குடவர்

பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.

3 பரிமேலழகர்

பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பழைமை யெனப்படுவது யாது எனின்-பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு-அது பழைமையான நண்பர் தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம். உரிமையால் விரும்பியவாறு செய்வன: கீழ்வினைஞரா யிருந்து கருமஞ் செய்யுங்காற் கேளாது செய்தல், கேடாகச் செய்யினும் மனம் வருந்தாமை, தமக்கு வேண்டியவற்றைத் தாமே யெடுத்துக்கொள்ளுதல், பணிவும் அச்சமுமின்மை, வீட்டிற்குள் வந்து தாராளமாகப் பழகுதல் முதலியன. இத்தகைய வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொள்வதே பழமை என்றவாறு. "ஒருவர் பொறையிருவர் நட்பு." (நாலடி. 223) என்றதும் இது பற்றியே. 'பழைமை' ஆகுபெயர்.

5 சாலமன் பாப்பையா

பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

7 சிவயோகி சிவக்குமார்

பழைமை எனப்படுவது என்னவென்றால் எதன் பொருட்டும் நாட்கள் மாறுவதைப் போல் மாற்றிக் கொள்ளாமல் தொடரும் நட்பு.

More Kurals from பழைமை

அதிகாரம் 81: Kurals 801 - 810

Related Topics

Because you're reading about Old Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature