பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.
Transliteration
peridhinidhu paedhaiyaar kaeNmai pirivin-kaN
peezhai tharuvadhon Ril.
🌐 English Translation
English Couplet
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.
Explanation
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
2 மணக்குடவர்
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
3 பரிமேலழகர்
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பேதையார் கேண்மை பெரிது இனிது-பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-எங்ஙனமெனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை. "பேயொடுங் கூடிப் பிரிதலோ வரிதே". "பரீ இ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னு மரீ இப் பின்னைப் பிரிவு." [நாலடி. 220] ஆதலால், பழகினவரை விட்டுப் பிரிதலென்பது பொதுவாகத் துன்பந் தருவதே, ஆயின், பேதையார்நட்பு வரவரத் தேய்ந்துவருதலாலும் யாதொரு நன்மையுஞ் செய்யாமையாலும், அவரை விட்டுப் பிரிதல் எள்ளளவுந் துன்பந் தராததாம். இதனால், அறிவுடையோர் நட்பாயின்அவர் பிரிவின்கண் பெரிதுந் துன்பம் தருமென்பது,எதிர்நிலை யளவையாற் பெறப்படும் . பேதையாரைப் புகழுவதுபோற் பழித்தலால், இது வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாம் .
5 சாலமன் பாப்பையா
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.
6 கலைஞர் மு.கருணாநிதி
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
7 சிவயோகி சிவக்குமார்
பெரியது இனிமையானது பேதைகளின் நட்பு காரணம் அவர்களின் பிரிவு துன்பம் ஒன்றும் தராது.
8 புலியூர்க் கேசிகன்
ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்
More Kurals from பேதைமை
அதிகாரம் 84: Kurals 831 - 840
Related Topics
Because you're reading about Folly