Kural 975

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

perumai yudaiyavar aatruvaar aatrin
arumai udaiya seyal.

🌐 English Translation

English Couplet

The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.

Explanation

(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

2 மணக்குடவர்

பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.

3 பரிமேலழகர்

பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார'¢ என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பெருமை உடையவர்- பெருமைக் கேதுவான பண்பை இயற்கையாக வுடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - பிறராற் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செய்து முடிப்பர். ".............. பெருமையுடைய ராயினார் தாம் வறிய ராய வழியும் பிறராற் செயற்கரியவாய தஞ் செயல்களை விடாது அவை செய்யுநெறியாற் கடைபோகச் செய்தலை வல்லராவர். "வறியராய வழியு மென்பது, முன்பு செய்து போந்தமை தோன்றப் 'பெருமையுடையவ' ரென்றதனாலும், 'ஆற்றுவா' ரென்றதனானும் பெற்றாம்' என்பது பரிமேலழகருரை, இக்குறளாற் பெருமையின் வெளிப்பாடு கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

6 கலைஞர் மு.கருணாநிதி

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.

8 புலியூர்க் கேசிகன்

பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர்.

More Kurals from பெருமை

அதிகாரம் 98: Kurals 971 - 980

Related Topics

Because you're reading about Greatness

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature