Kural 1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

piNaiyaer matanhoakkum naaNum udaiyaatku
aNiyevanoa Edhila thandhu.

🌐 English Translation

English Couplet

Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

Explanation

Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

2 மணக்குடவர்

பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

3 பரிமேலழகர்

(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு- புறத்துப் பெண்மானொத்த பார்வையழகையும் அகத்து நாணழகையும் உடைய இவளுக்கு; ஏதில தந்து அணி எவனோ- இயற்கையும் தற்கிழமைச்சார்புமான இவ்வணிகளே அமைந்திருக்க, செயற்கையும் பிறிதின் கிழமைச் சார்புமான பிற அணிகளைக்கொண்டு வந்து அணிதல் எதற்காம். மடநோக்கு அழகிய பார்வை, இயற்கையழகை மறைத்தலும் இவளுக்கு வீண் சுமையாதலும் எனக்குத் துன்பந்தருதலுமன்றி; இப்புறவணிகளால் ஒருபயனுமில்லை யென்பது தலைமகன் கருத்து.

5 சாலமன் பாப்பையா

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

6 கலைஞர் மு.கருணாநிதி

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

7 சிவயோகி சிவக்குமார்

உடன் இசைந்தவரிடத்தில் குனிந்த பார்வையும் நாணமும் உடையவளுக்கு அணிவதற்கு வேறு எதை தருவது.

8 புலியூர்க் கேசிகன்

மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?

More Kurals from தகையணங்குறுத்தல்

அதிகாரம் 109: Kurals 1081 - 1090

Related Topics

Because you're reading about Beauty & Attraction

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature