Kural 836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

poipadum ondroa punaipooNum kaiyaRiyaap
paedhai vinaimaeR koLin.

🌐 English Translation

English Couplet

When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

Explanation

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

2 மணக்குடவர்

ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.

3 பரிமேலழகர்

கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கை அறியாப் பேதை வினைமேற்கொளின் - செய்யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செய்யின்; பொய்படும் ஒன்றோ - அதிற் புரைவிழுதல் மட்டுமோ. புனைபூணும் - அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும். 'புரைவிழுதல்' துளைபடுதல் போல் உள்ளழிதல். 'புனை முதனிலைத் தொழிலாகுபெயர். பேதை வினைசெய்யின் வினையுங்' கெட்டுத் தானும் கெடுவான் என்பதாம். பொள் - பொய்.

5 சாலமன் பாப்பையா

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

7 சிவயோகி சிவக்குமார்

அர்தமற்ற ஒன்றோ சரியாக அமையும்?, நுட்பம் அறியாத பேதை செயல்பட மேற்கொண்டால். ( பேதை தேவையற்றதையும் செய்ய முடியாது)

8 புலியூர்க் கேசிகன்

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

More Kurals from பேதைமை

அதிகாரம் 84: Kurals 831 - 840

Related Topics

Because you're reading about Folly

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature