Kural 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

poRiyinmai yaarkkum pazhiyandru aRivaRindhu
aaLvinai inmai pazhi.

🌐 English Translation

English Couplet

'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man!.

Explanation

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

2 மணக்குடவர்

யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

3 பரிமேலழகர்

பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று -மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது ; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டியவற்றை யறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது. அறியவேண்டுவன நால்வகைவலி , காலம் , இடம் முதலியன. ஒருவன் முற்பிறப்பிற் செய்தவினை செய்தவனாலும் அறியப்படாமையாலும் , பெரும்பாலும் நல்லோர் வறியநிலையிலும் தீயோர் செல்வ நிலையிலும் இருப்பதாலும் , சிலவினைகட்கு ஒரே முயற்சியும் , சிலவினைகட்குப் பலமுயற்சியும் சிலவினைகட்கு விடாமுயற்சியும் வேண்டியிருப்பதனாலும் ,ஊழ்பற்றியன்றி வினைபற்றியே மக்கட்குப் புகழும் பழியும் உண்டாம் என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

6 கலைஞர் மு.கருணாநிதி

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

புலன் இல்லாமல் இருப்பது எந்த மனிதருக்கும் பழிக்கும் ஒன்றாக இருக்காது. செய்யவேண்டியதை செய்யாமல் இருந்தால் பழிக்கப்படும்.

More Kurals from ஆள்வினையுடைமை

அதிகாரம் 62: Kurals 611 - 620

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature