Kural 1259

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pulappal enachchendraen pullinaen nenjam
kalaththal uruvadhu kandu.

🌐 English Translation

English Couplet

'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.

Explanation

I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

2 மணக்குடவர்

புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) (இ-ரை.) புலப்பல் எனச் சென்றேன்-அவர் வந்தபொழுது . உரையாடாது ஊடவேண்டுமென்று கருதி அவர் முன்நில்லாது வேறோரிடத்திற்குப் போனேன் ; நெஞ்சம் கலத்தல் உறுவதுகண்டு புல்லினேன்-அங்ஙனம் போய்த்தான் என்ன? என் உள்ளம் நிறையில் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலையறிந்து , இனி இவ்வூடல் பயன்படாதென்று அவரைத் தழுவினேன். நிறையழிந்தவர்க்குக் கூடலே யன்றி ஊடலில்லை யென்பதாம்.

5 சாலமன் பாப்பையா

அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

7 சிவயோகி சிவக்குமார்

புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.

8 புலியூர்க் கேசிகன்

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்.

More Kurals from நிறையழிதல்

அதிகாரம் 126: Kurals 1251 - 1260

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature