Kural 1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pullik kidandhen pudaipeyarndhaen avvalavil
allikkol vatre pasappu,

🌐 English Translation

English Couplet

I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me.

Explanation

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.

2 மணக்குடவர்

முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்- முன் பொருநாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாது ஒரு சிறிது தள்ளிப்படுத்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வு அற்று- அங்ஙனம் படுத்த அளவில் அள்ளிக்கொள்ளும் அளவாகப் பசலை வந்துதிரண்டுவிட்டது. அப்புடை பெயர்ச்சிக்கே அவ்வாறான பசலை, இப்பிரிவின் கண் எவ்வாறாகுமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்பதாம். ஏகாரம்தேற்றம்.

5 சாலமன் பாப்பையா

முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

6 கலைஞர் மு.கருணாநிதி

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.

7 சிவயோகி சிவக்குமார்

கூடிக்கிடந்தேன் கொஞ்சம் விலகினேன் அதற்குள்ளாகவே அள்ளிக் கொண்டது பசப்பு.

8 புலியூர்க் கேசிகன்

தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே.

More Kurals from பசப்புறுபருவரல்

அதிகாரம் 119: Kurals 1181 - 1190

Related Topics

Because you're reading about Pallor of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature