Kural 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

pun-kannai vaazhi marulmaalai emkaelpoal
van-kanna thoanin thunai.

🌐 English Translation

English Couplet

Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?.

Explanation

A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?.

2 மணக்குடவர்

மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.

3 பரிமேலழகர்

(தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தன் செயலறவை அதன் மேலேற்றிச் சொல்லியது) மருள்மாலை - மயங்கும் மாலையே!; புன்கண்ணை - நீயும் என்னைப்போலத் துன்பமுடையையாயிருக்கின்றாய்; நின்துணை எம் கேள் போல் வன்கண்ணதோ-உன்னுடைய துணையும் என்னுடைய துணைபோல; அன்பற்றதோ? சொல்வாயாக மருளுதல் அல்லது மயங்குதல் பகலும் இரவும் தம்முட்கலத்தல். அவை கலங்குதற் பொருளும் உணர்த்தும் .புன்கண் அழகின்மையும் துன்பமும். மாலைப் பொழுது ஒளியின்றிப் பொலிவிழத்தலாலும், தலைமகள் தன் செயலற்ற நிலையை அதன் மேலும் ஏற்றிக் கூறினாள். எமக்குத் துன்பஞ்செய்தாய்; அதனால் , நீயுங் கலங்கிப் பொலிவிழந்தாய் என்னுங் குறிப்பால் 'வாழி' என்றாள்.

5 சாலமன் பாப்பையா

பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.

6 கலைஞர் மு.கருணாநிதி

மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.

7 சிவயோகி சிவக்குமார்

மாயமாக தாக்கி மயங்கும் மாலைப் பொழுதே வாழ்க எனது உறவுக்குரியவர் போல் கடினமானதோ உன் துணை.

8 புலியூர்க் கேசிகன்

மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ!

More Kurals from பொழுதுகண்டிரங்கல்

அதிகாரம் 123: Kurals 1221 - 1230

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature