Kural 962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

seerinum seeralla seyyaarae seerodu
paeraaNmai vaendu pavar.

🌐 English Translation

English Couplet

Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.

Explanation

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

2 மணக்குடவர்

தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.

3 பரிமேலழகர்

சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சீரொடு பேராண்மை வேண்டுபவர்- புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; சீரினும் சீர் அல்ல செய்யார்- புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார். ஏகாரம் தேற்றம். எந்நிலைமையிலுந் தளராத மனத்திண்மை யுடைமையால் மானம் பேராண்மை யெனப் பட்டது. சீரினுஞ் சீரல்ல செய்தல் அன்முறையாய்க் கொள்ளையடித்து அறச்சாலை நிறுவுதல் போல்வது.

5 சாலமன் பாப்பையா

புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.

7 சிவயோகி சிவக்குமார்

சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார் சிறப்புடன் திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.

8 புலியூர்க் கேசிகன்

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்ய மாட்டார்கள்

More Kurals from மானம்

அதிகாரம் 97: Kurals 961 - 970

Related Topics

Because you're reading about Honor & Dignity

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature