Kural 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

sellaa idaththuch sinandheedhu sellitaththum
iladhanin theeya piRa.

🌐 English Translation

English Couplet

Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

Explanation

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

2 மணக்குடவர்

இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.

3 பரிமேலழகர்

சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - அது தாக்கக் கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை. செல்லிடத்துச் சினத்தால் விளைவது இம்மைத் துன்பமே. ஆயின், செல்லாவிடத்துச் சினத்தால் விளைவன இம்மைப்பழியும் மறுமைத் துன்பமுமாம். அதனால் அதனினுந் தீயன வேறில்லை யென்றார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

கோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும்.

6 சாலமன் பாப்பையா

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

7 கலைஞர் மு.கருணாநிதி

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

8 சிவயோகி சிவக்குமார்

செல்லத்தகாத இடத்தில் சினம் தீமையானது செல்லத் தகுந்த இடத்திலும் அதைவிட தீமையானது இல்லை.

More Kurals from வெகுளாமை

அதிகாரம் 31: Kurals 301 - 310

Related Topics

Because you're reading about Anger Management

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature